முதியோர் இல்லத்தில் இருந்து புத்தாண்டுக்கு உறவினர் வீட்டுக்கு சென்ற வயோதிப பெண் மீது தாக்குதல்
முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 72 வயதான பெண்மணி, தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தன்று காலி பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட கொடாமுன பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் வீடடுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த உறவினர் மற்றும் பேரப்பிள்ளை அவரை தாக்கியுள்ளதுடன் அவர் படுகாயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குணவதி கருணாரத்ன என்ற இந்த வயோதிப பெண்மணி அவரது தங்கையின் மகளது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த உறவினரான மகளும் அவரது கணவர் மற்றும் பேரப்பிள்ளை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிட்டிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹேஷ் கருணாரத்ன பொலிஸாருடன் வீட்டுக்கு சென்று 1990 அம்பியூலன்ஸ் மூலம் பெண்மணி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வயோதிப பெண்ணை தாக்கிய உறவினரான மகள், அவரது கணவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.