சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்
சென்னை புறநகரில் அமைக்கப்படவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் செயற்றிறன் மையத்தின் தலைமைப்பொறுப்பு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு (Ravichandran Ashwin) வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் குறித்த செயற்றிறன் மையத்திலேயே சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பயிற்சி பெரும் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது மற்றும் பயிற்சி நுட்பங்கள் தொடர்பாக தீர்மானிப்பது போன்ற பொறுப்புக்கள் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏலத்தில் அஸ்வின்
அதேவேளை, 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில், அஸ்வின் சென்னை அணியால் வாங்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் (Kasi Viswanathan) தெரிவித்துள்ளார்.
மேலும், ஏலத்தின் தன்மையை பொறுத்து அஸ்வின் சென்னை அணியால் வாங்கப்படுவது தீர்மானிக்கப்படும் எனவும் தற்போதைக்கு செயற்றிறன் மையத்தின் தலைமை பொறுப்புக்களை அவர் ஏற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |