நாட்டையும் மீள் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சியை நேரில் பாராட்டிய தேரர்கள்
இலங்கையில் அனர்த்தத்துக்கு பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்களும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் இன்று சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கான நிவாரணம்
இதன்போது, கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளில் தலதா மாளிகை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து இதன்போது தியவடன நிலமே ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
அதுமட்டுமன்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு நிதி நன்கொடையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் ராஜகீய பன்டித வண, மஹவெல ரதனபால நாயக தேரர், சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரிய மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர், சிறப்புமிக்க பதுளு முதியங்கன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி முருத்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக தேரர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri