சட்டவிரோத முறையில் கட்டுத்துவக்கினை வைத்திருந்த நபர் கைது
திருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மிருகங்களை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி வீட்டின் பின்புறத்தில் கட்டுத்துவக்கினை மறைத்து வைத்திருந்த நிலையிலே, கோமரங்கடவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுத்துவக்குடன் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
