வேட்டியை பலவந்தமாக களைந்த பொலிஸார்: கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல்

Vavuniya North Western Province
By Thileepan Mar 09, 2024 07:30 PM GMT
Report

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்வகளின் வேட்டியை பலவந்தமாக களைந்து இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக பொலிஸார் நடந்துக்கொண்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03.2024) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், பொலிஸார் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலின் தற்போதைய நிலை

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலின் தற்போதைய நிலை

பெரும் அராஜகம்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த செல்வராசா கஜேந்திரன்,

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவாரத்திரி நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மிகப் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

வேட்டியை பலவந்தமாக களைந்த பொலிஸார்: கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல் | Arrested At Vedukunari Hill Adisivan Temple

சிவராத்திரிக்கு முன்பு இருந்தே ஆலய நிர்வாகத்தினர் மீது அடக்குமுறைகளை பயன்படுத்தி இருந்தனர். ஆலய நிர்வாகத்தினர் பூஜைக்காக ஏற்பாடுகளை செய்த போது ஆலயத்திற்கு எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

மேலும், தூர இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையே இருந்தது. குடிநீரை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

5 கிலோமீற்றர் நடந்து சென்று குழந்தைகள் உட்பட பலர் தண்ணீர் தாகத்தில் இருந்த போதும் அதனை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னரே 2 மணிக்கு பின்னர் குடி நீர் கொண்டு செல்லப்பட்டது.

இரவில் அரை நிர்வாணமாக்கப்பட்ட தமிழர்கள்! வேலன் சுவாமிகள் அதிர்ச்சி தகவல்

இரவில் அரை நிர்வாணமாக்கப்பட்ட தமிழர்கள்! வேலன் சுவாமிகள் அதிர்ச்சி தகவல்

8 பேரை கைது 

கொண்டு செல்லப்பட்ட தண்ணீரையும் மாலை நேரம் அவர்கள் திறந்து வெளியேற்றினர். பக்தர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முற்பட்டனர்.

படைப்பதற்காக செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

வேட்டியை பலவந்தமாக களைந்த பொலிஸார்: கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல் | Arrested At Vedukunari Hill Adisivan Temple

பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலவந்தமாக சப்பாத்து கால்களுடன் நுழைந்த அதிகாரிகள் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். கொண்டு சென்ற போது 3 கிலோமீற்றர் நடத்தி விலங்கிட்டு இழுத்துச் சென்றார்கள். இழுத்துச் செல்லப்பட்ட போது கட்டைகள் தாக்கி கால்களில் காயமடைந்துள்ளார்கள்.

கைகளை விலங்குகளால் இறுக்கி கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரின் வேட்டியை பலவந்தமாக களைந்து கொண்டு சென்றனர்.

நெடுங்கேணி பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடத்தியிருந்தார். ஏனையவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி இருந்தும் பொலிஸார் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்'' என்றார்.

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, Homburg, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, கந்தர்மடம்

26 May, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Beverwijk, Netherlands

24 May, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கொழும்பு, சிட்னி, Australia, உரும்பிராய்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், அரியாலை

27 May, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, சுன்னாகம், London, United Kingdom

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கல்வியங்காடு

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய குஞ்சுக்குளம், ஜீவநகர்

28 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருச்சி, India, Toronto, Canada

18 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நீராவியடி, வேலணை, Toronto, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, Mississauga, Canada, Brampton, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், New Malden, United Kingdom

26 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

23 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சிட்னி, Australia

25 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Endingen, Germany

27 May, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு

27 May, 2017
மரண அறிவித்தல்

இடைக்காடு, ஒட்டுசுட்டான்

25 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், கரணவாய் வடக்கு, Bremen, Germany

22 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US