வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை

Sri Lanka Police Vavuniya Selvarajah Kajendren
By Sheron Mar 09, 2024 01:59 PM GMT
Report

புதிய இணைப்பு

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் (12.03.2024) ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் பொலிஸார் தாக்கியமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்தபோது அவர்களை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டாம் இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தற்பொழுது வவுனியா நீதிமன்றதிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் எட்டு பேரும்  தற்பொழுது வவுனியா நீதிமன்றதில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

முதலாம் இணைப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்று (8) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

இருப்பினும், ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில், அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

வாய்த்தர்க்கம்

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜையின்போது கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், சப்பாத்துக்கள் அணிந்தபடி ஆலயத்துக்குள் புகுந்த பொலிஸார், வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்துகொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் அடாவடி: வெடுக்குநாறியில் கைதுசெய்யப்பட்ட 07 பேர் தடுத்துவைப்பு

பொலிஸாரின் அடாவடி: வெடுக்குநாறியில் கைதுசெய்யப்பட்ட 07 பேர் தடுத்துவைப்பு


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்துக்கு வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பதற்ற நிலை காணப்பட்டது.

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்துக்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் அத்துமீறல்

சுமார் அரை மணிநேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை 3 மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கினர்.

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

அதன் பின்னர், குடிநீருடன் உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை 6 மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.    

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

வெடுக்குநாறிமலையில் ஓம் நமசிவாய என்றதால் நேர்ந்த கதி! கைதானவர்களின் நிலை | Vavuniya Vedukkunaari Issue

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US