மன்னாரில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்ட சிறு கடற்தொழிலுக்கு மீண்டும் அனுமதி (Photos)
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தலையிட்டால் சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு மீண்டும் தள்ளாடி 14 கண் பாலத்தடியில் கடற்தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மன்னார்-யாழ் பிரதான வீதி தள்ளாடி 14 கண் பாலத்தடியில் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலங்களாக சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களை இராணுவம் அப்பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்காததன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்துள்ளனர்.
மீனவர்களின் நிலைமை
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று
திங்கட்கிழமை (30.01.2023) மாலை நேரடியாக சென்று மீனவர்களின் நிலைமை தொடர்பாக
ஆராய்ந்ததுடன் வன்னி இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சனை
தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக தள்ளாடி இராணுவ பொறுப்பு அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடிய தன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக மீனவர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் சிறு கடல் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பாலத்தடியில் நாகதாழ்வு, பெரிய நாவற்குளம், மாந்தை மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு சிறு கடற்றொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam
