சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் பலி
பண்டாரவளை தியத்தலாவை இராணுவ கல்வியல் கல்லூரி முகாமில் பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவர் இடிந்து இராணுவ வீரரின் மேலே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இராணுவ வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இராணுவ வீரரின் உடல் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தியத்தலாவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam