சர்ச்சைக்குரிய காணொளி : மாணவனின் மேலதிக கல்விக்கு ஏற்பட்ட பாதிப்பு
கொழும்பு பிரபல பாடசாலையின் ஆசிரியர் மற்றும் மாணவர் தொடர்பில் வெளியான மோசமான காணொளியால் குறித்த மாணவன் மேற்படிப்புக்காக பதிவு செய்திருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் அவரை விலக்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் மற்றும் ஆசிரியர்களின் மோசமான செயற்பாடுகள் தொடர்பான காணொளி மிகப் பழமையானது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள்
அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இருவர் பாடசாலையில் இருந்து மாற்றலாகி சென்றுள்ளனர். அதில் ஒருவர் இடமாற்றம் பெற்று சென்று ஆறு மாதங்கள் கடந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து பயிற்சிக்காக வந்தவர் எனவும், மற்றையவர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனின் தாய் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் 2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். பரீட்சைக்கு ஒரு வருடத்திற்கு முன்னரே மாணவத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விவகாரம் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளன.
You May Like This Video..
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri