அரசின் செயற்பாடுகளால் வெறுப்படைந்து பதவி விலகிய பெண்
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் முதல் தலைவர் டாக்டர் ரமணி ஜயசுந்தர இன்று (28.01.2026) இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் பதவியேற்று நான்கு மாதங்களுக்குள், ஆணைக்குழுவை செயல்படுத்த அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லாததைக் காரணம் காட்டியே இராஜினாமா செய்துள்ளார்.
ரமணி ஜெயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை நேற்று (27.01.2026) ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.
2024 இல் நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த ஆணைக்குழு, இலங்கையில் பெண்களுக்கான முதல் ஆணைக்குழுவாகும்.

2025 செப்டம்பரில் ரமணி ஜெயசுந்தரவுடன் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆணைக்குழுவுக்கு நிதி வழங்கவோ, சுயாதீனமான அலுவலக வசதிகளை வழங்கவோ,ஊழியர்களை ஒதுக்கவோ அரசாங்கம் தவறிவிட்டது.
பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசிய கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவது ஆணைக்குழுவின் பணியாகும். பெண்களின் உரிமை மீறல்களை விசாரிக்கவும் இதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri