பல்கலைக்கழக மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவச் சிப்பாய் கைது
களுத்துறை - பாணந்துறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒலுவில்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் சென்றுக்கொண்டிருந்த மாணவி மீதே குறித்த தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
காலி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் சியம்பலாண்டுவ, புத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இராணுவச் சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சியம்பலாண்டுவ பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
