யாழில் காணியொன்றினுள் அத்துமீறி மரம் வெட்டிய இராணுவத்தினர்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள சேமக்காலை ஒன்றினுள் இராணுவத்தினர் உட்புகுந்து வாகை மரத்தினை வெட்டியுள்ளனர்.
இதன்போது, பிரதேச வாசிகள் மானிப்பாய் பொலிஸார் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு தெரிவித்து இது குறித்து அறிய முற்பட்ட பொழுது, வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் தொடர்ந்து மரத்தை கொண்டு செல்வதற்கு தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராணுவத்தினர் குறித்த தனியார் காணி உரிமையாளரை நாட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனவும் பாதிக்கபட்டது சாதாரண பொது மகனாக இருந்ததால் பொலிஸார் உடனடியாக கைது செய்திருப்பர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
வழித்தட அனுமதி
இதன் பின்னர், இது குறித்து மானிப்பாய் பொலிஸாரை தொடர்பு கொண்ட பொழுது இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனவள பாதுகாப்பு திணைக்கள யாழ். மாவட்ட அதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாகவும் வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் வழித்தட அனுமதியினை மாத்திரமே பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
