பாகிஸ்தான் - கில்கிட் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு! இராணுவம் குவிப்பு
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து, அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஈரானிய தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கில்கிட் நகரின் முக்கியச் வீதிகளில் திரண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வன்முறையாக மாறிய போராட்டம்
இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதில், அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் கூட்டத்தைக் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாகாண அரசு கில்கிட் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இணையச்சேவைகள் துண்டிப்பு
இணையச் சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, நகரின் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இதர முக்கிய நகரங்களிலும் பதற்றம் நிலவி வருவதால், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri