சினோபாம் தடுப்பூசி பெற்ற சிலர் வைத்தியசாலையில் அனுமதி? - செய்திகளின் தொகுப்பு
சினோபாம் கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சிலருக்கு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மயக்கம் உள்ளிட்ட சில அறிகுறிகளை அடுத்து, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என பொரளை பெண்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் தேதுணு டயஸ் தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,