4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மற்றும் இரத்தினபுரி
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தில் தொலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடக்கவெல, கலவாக மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri