குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக முதல் பெண் அதிகாரி நியமனம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமாஷா முத்துமாலா குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் பொலிஸ் அதிகாரி இவராவார்.
இந்த நியமனத்திற்கான அனுமதியைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
இமாஷா முத்துமாலா கடந்த 2007 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதுடன், அவருக்கு 14 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் அனுபவமுள்ளது.
உருகுணை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான அவர், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றுள்ளார்.
நுகேகொடை பொலிஸ் பிரிவில் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் பொலிஸ் நற்சான்று அறிக்கை வழங்கும் பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.