61 வயதில் 20 ஆண்டுகள் சிறை! அநுரவின் மறைமுக எச்சரிக்கை
நமது நாட்டில் ஒரு அரசியல்வாதி 61 வயதில் 20 ஆண்டுகள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால் செல்வத்தால் என்ன பயன்? என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) நடைபெற்ற விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
20 ஆண்டுகள் சிறை
“முதலில் கூறியதை போல நாட்டில், அரசியலில் தற்போது ஒரு கறுப்புப் பொறிமுறை இயங்கி வருகிறது. அதை தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
ஒருவர் 61 வயதில் 20 ஆண்டுகள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால் செல்வத்தால் என்ன பயன்?"
அவர் விடுவிக்கப்படும்போது அவருக்கு 81 வயது இருக்கும். அதன் பயன் என்ன?
நாட்டு மக்களின் வரிப் பணத்தை திருடுவது நியாயமானதா? மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கறுப்புப் பொறிமுறை நம் முன் உள்ளது.
மீண்டும் கூறுகின்றேன். இந்தக் கறுப்புப் பொறிமுறை உடைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடிய சூழலை உருவாக்கப்படும் என நான் கூறுகின்றேன்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
