பதவி விலகுகிறார் நிதி அமைச்சின் செயலாளர்
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த ஜூன் மாத இறுதியில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகிந்த சிறிவர்தன ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “சமீபத்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடாக நாம் மாறிவிட்டோம்.
பொருளாதார தளம்
இது நமது நாட்டை மீண்டும் ஒரு நியாயமான பொருளாதார தளமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்.
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவால் நிறைய நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் அவரைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன், இந்த மாத இறுதியில் அவர் நமது நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன்.
அவர் ஆசிய வளர்ச்சி வங்கியைச் சேர்ந்தவர். இந்த மாத இறுதியில் அவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்கவுள்ளார்
இலங்கை உட்பட 7 நாடுகளை மாற்று நிர்வாக இயக்குநராக பிரதிநிதித்துவப்படுத்துவார் என கூறியுள்ளார்.
