தமிழ் கட்சிகளிடம் அநுர அரசு விடுத்துள்ள வேண்டுகோள்!
"வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும். எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்." என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "மக்கள் ஆணையை மீறி எவரும் செயற்பட முடியாது. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தமிழ்க் கட்சிகள் செயற்பட வேண்டும்.
எந்தச் சபையில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்.
அதைவிடுத்து குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது. அது மக்கள் ஆணைக்குச் செய்யும் துரோகம் ஆகும்."என தெரிவித்துள்ளார்.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 20 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
