பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்பாக நேற்று (26)ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் தின நிகழ்வுகள்
இதன்போது சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடுசெய்த குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
