மன்னாரில் மோப்ப நாயின் உதவியுடன் போதைப்பொருள் தடுப்பு பரிசோதனை (Photos)
மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதைப்பொருள் பரிசோதனைகளை பொலிஸார் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் பரிசோதனை நடவடிக்கையானது நேற்று (08.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை
வடமாண ரீதியாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் நேற்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதிகள், பாடசாலைகள், பொது இடங்களில் குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா? என்பது தொடர்பிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பரிசோதனை தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில்
மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
