முல்லைத்தீவில் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 82 அகவையுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 17.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது வயோதிபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலேயே இவரது உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவரது உயிரிழப்புடன் மாவட்டத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 42 நிமிடங்கள் முன்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam