முல்லைத்தீவில் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 82 அகவையுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 17.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது வயோதிபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலேயே இவரது உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவரது உயிரிழப்புடன் மாவட்டத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
