முல்லைத்தீவில் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 82 அகவையுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 17.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது வயோதிபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலேயே இவரது உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவரது உயிரிழப்புடன் மாவட்டத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam