முல்லைத்தீவில் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 82 அகவையுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 17.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது வயோதிபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலேயே இவரது உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவரது உயிரிழப்புடன் மாவட்டத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri