இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்: கடும் மன வருத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்
‘இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள். கூறப்பட்டதை செவிமடுத்திருந்தால் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டிருக்காது” என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை என்றும் அது இடைநிறுத்தப்படும் என்றும் நிதியமைச்சு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இதன் காரணமாக எமது நாட்டு மக்களும் வர்த்தகர்களும் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். டொலர்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு நல்ல முடிவுதான். இதை முதலில் சொன்னோம். முதலில் இப்படி போக முடியாது என்றோம்.
எனவே சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறக்கூடிய 3 பில்லியன் டொலர்கள் நினைத்துப் பார்க்க முடியாதவை.
சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லும்போது சர்வதேச அளவில் நமக்குக் கிடைக்கும் நம்பிக்கையைப் பற்றி சிந்திக்கிறோம். அத்தகைய நம்பிக்கையை நாம் கட்டியெழுப்பியிருந்தால், நிதிச் சந்தைகளில் இருந்து கடன் வாங்க முடிந்திருக்கும். அந்த நடவடிக்கைகளை முதலில் எடுத்திருந்தால் இவ்வாறு கடன்கள் நிறுத்தப்பட்டிருக்காது.
பிரச்சினைகள் தீவிரமடைந்த போது, கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை, மக்கள் வரிசையில் நிற்காமல் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று கூறினோம். கேட்கவில்லை. கடனை அடைக்க மக்கள் வரிசையில் நின்றனர். முடிவில் என்ன நடந்தது?
கடனை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. அப்போது சுமார் 5.5 பில்லியன் டொலர் அந்நிய கையிருப்பு இல்லாமல் போனது. இதுபல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையை இந்தப் பேரழிவிற்கு இழுத்துச் சென்றவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
இந்த சரிவால் நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகள் வீணாகிவிட்டதை எண்ணி வருந்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.



