பெர்லின் தாக்குதலுக்கு மத்தியில் ஆம்ஸ்டர்டாமில் கோலாகலமாக நடைபெற்ற ஊர்வலம்
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற உலகப் பெருமை நிகழ்வின் பிரதான கால்வாய் ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளனர்.
வானவில் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகள் கால்வாய்களில் வலம் வர, கரைபுரண்டோடிய மக்கள் உற்சாகமாக ஆரவாரித்தனர்.
கால்வாய் ஊர்வலம்
ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற Pride ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் சோகம் விலகாத நிலையிலும் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
நெதர்லாந்தின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை பிரதமரான ரொப் ஜெட்டன் (Rob Jetten) இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

பெர்லின் தாக்குதலைத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாமில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை மற்றும் ரகசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
பயமுறுத்துவதன் மூலம் மக்களை முடக்க நினைக்கும் பயங்கரவாதத்திற்குத் தலைவணங்க மாட்டோம் என்றும், இந்தத் தாக்குதல்கள் பெருமை (Pride) விழாக்களின் அவசியத்தை மேலும் உலகிற்கு உணர்த்துவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதியளித்துள்ளனர்.