அமெரிக்காவின் அதிரடி மீட்பு நடவடிக்கை: சினிமாவை மிஞ்சிய காட்சிகள்!
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை, ஈரானின் கடும் பாதுகாப்பையும் மீறி அமெரிக்க சிறப்புப் படையினர் அதிரடியாக மீட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையானது திரைப் படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்திருந்ததாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் F-15 ரக போர் விமானம் ஈரானிய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டது.
இதிலிருந்து வெளியேறிய ஒரு விமானி உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு உயர்மட்ட அதிகாரியான கர்னல் (Colonel) வீரர் ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் மாயமானார்.
அவரைத் தேடும் பணியில் ஈரானியப் படைகளும் அமெரிக்காவும் ஒரு நிழல் யுத்தத்தையே நடத்தின.
இதன் தீவிரத்தன்மையை ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,