10 வருடங்களுக்கு பின் பாரிய பனிப்பொழிவை எதிர்கொள்ளும் அமெரிக்கா
ஒரு தசாப்த காலத்தின் பின்னர் முதன் முறையாக பாரிய பனிப்பொழிவையும், கடுமையான குளிரையும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடுப்பகுதியில் ஆரம்பமான பனிப்புயல் எதிர்வரும் ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
துருவ சுழலினால் ஏற்பட்ட தாக்கம்
கென்டக்கி (Kentucky) மற்றும் தென்கிழக்கு மாநிலமான வேர்ஜீனியா (Virginia) ஆகியவற்றில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர மிசிசிப்பி மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் பிராந்தியத்தின் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவ சுழலினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே இந்த காலநிலை மாற்றம் தோன்றியுள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri