வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்
புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 11 இலட்சம் புதுப்பிக்க முடியாத டிரக் ஓட்டுநர் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் சலுகைக் காலத்தில் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். அதற்கு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர, புதுப்பிக்க முடியாத இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களின் 10 லட்சம் உரிமங்களும் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
