வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்
புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 11 இலட்சம் புதுப்பிக்க முடியாத டிரக் ஓட்டுநர் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் சலுகைக் காலத்தில் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். அதற்கு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தவிர, புதுப்பிக்க முடியாத இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களின் 10 லட்சம் உரிமங்களும் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan