பருத்தித்துறை டிப்போவிலிருந்து இ.போ.ச பேருந்துகள் சீரான முறையில் இயங்குவதில்லை என குற்றச்சாட்டு (Photos)
இலங்கை போக்குவரத்துசபை பருத்தித்துறை டிப்போவிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் சீரான முறையில் இயங்காமையால் சிக்கலை எதிர்நோக்குவதாக பொது மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பருவச்சீட்டினை பெறும் பயணிகள் இது காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி (Video)
தனியார் பேருந்துகளுக்கு பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம்
பணம் செலவழித்து பருவகால சீட்டினை பெறுபவர்கள் இ.போ.ச பேருந்துகள் உரிய நேரத்திற்கு செயற்படாமை மற்றும் சில நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாமை காரணமாக தனியார் பேருந்துகளிற்கு பணம் செலவழித்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

தேவையான ஆளணி மற்றும் பேருந்துகள் இருக்கின்ற போதும் பேருந்துகள் நேரத்திற்கு பயணிப்பதில்லை எனவும், சில நேரங்களில் பேருந்து இயக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

