சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி (Video)

Badulla Nuwara Eliya Negombo
By Benat Nov 28, 2023 05:47 AM GMT
Report

 ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராகலை மத்திய பிரிவு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் எனும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் கடந்த 8 வருடங்களாக ராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை வைத்துள்ளதாகவும், இவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் தனது கடைக்கு ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியை பொருட்களை கடனாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணத்தில் சந்தேகம்

எனினும், இவர் பெற்ற கடனை செலுத்துவதில் சில குழறுபடிகள் ஏற்பட்டதால் இவருக்கெதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, அவர் பெற்ற கடன் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்தது.  

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி (Video) | A Person Who Died In Prison

எவ்வாறாயினும்,  நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு, உயிரிழந்த நபர் இரண்டு முறை முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

இந்தநிலையில்,  நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய  நீர்கொழும்பு பொலிஸார் கடந்த 23ஆம் திகதி இராகலை நகருக்குச் சென்று அவரை கைது செய்ததுடன்,  இராகலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர். 

அதன் பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரை  நாளையதினம் (29) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச்  செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தேவையான பொருட்களை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இறைச்சி மற்றும் மீன்கள் உட்பட பெரும்பாலான உணவுப் பொருட்களில் விஷம்! பொது மக்களிற்கு முக்கிய தகவல்

இறைச்சி மற்றும் மீன்கள் உட்பட பெரும்பாலான உணவுப் பொருட்களில் விஷம்! பொது மக்களிற்கு முக்கிய தகவல்

எனினும், நேற்று முன்தினம்(26) இரவு ராகலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர். 

இதனையடுத்து உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் உள்ளிட்டோர் நேற்று (28) அதிகாலை நீர்கொழும்புக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர். 

இதன்போது, அவர் அணிந்திருந்த சாரத்தினால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததை அவதானித்ததாகவும், பதுளை சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டவர் எப்போது நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்கு  தெரியாது என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், 29ஆம் திகதி தன்னை பிணையில் எடுக்குமாறு கூறிய தனது சகோதரன் இப்படி ஒரு தவறான முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை எனவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்று  உயிரிழந்தவரின் மனைவியும் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் (Photos)

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் (Photos)

இலங்கையில் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இலங்கையில் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!

மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US