நாட்டை உலுக்கிய திட்டமிடப்பட்ட இரட்டை கொலை! விசாரணையில் வெளியான இரகசிய தகவல்
தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பல கொலைகளில் தொடர்புடைய ஒரு கூலி கொலையாளியாக இருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் நடத்தைக்கும், வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சியை சுட்டுக் கொன்றவரின் நடத்தைக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பல கொலைகள் பற்றிய தகவல்
சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதன் மூலம் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் கொலை பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்த பல கொலைகள் பற்றிய தகவல்களையும் வெளிக்கொணர முடியும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி இந்த இரட்டைக் கொலைக்கு உதவிய நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் சகோதரர்கள் என்ற தகவலும் தெரிவித்துள்ளது.
தலங்கம, அகுரேகொடவில் ஒரு வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் காரில் சுட்டுக்கொல்லும் திட்டம் அபுதாபியில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனியே சுத்தாவால் முழுமையாக திட்டமிடப்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கரந்தெனியே சுத்தா இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும், தாக்குதலுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கியமையும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணைகளில் வெளியான தகவல்
குறித்த இராணுவத்திலிருந்து தப்பிய இரண்டு கூலி கொலையாளிகள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கரந்தெனியே சுத்தா வழக்குகளில் தொடர்ந்து முன்னிலையாகி வந்த இந்த வழக்கறிஞர், சமீபத்தில் சுத்தாவின் முக்கிய போட்டியாளரான லோகு பட்டியின் வழக்குகளில் முன்னிலையானமையினால் வெறுப்பு காரணமாக இந்த கொலையை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நாளில் (13 ஆம் திகதி) கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர், கிளப் வசந்த கொலை வழக்கில் லோகு பட்டிக்காக முன்னிலையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
T-56 ஆயுதம் மற்றும் கைத்துப்பாக்கியை வழக்கறிஞரைக் கொல்ல இந்த சந்தேகநபர்கள் வாடகைக்கு எடுத்து கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளமை என்பதும் தெரியவந்துள்ளது.
வாடகைக் கொலையாளிகள்
வாடகைக் கொலையாளிகள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது காவலில் உள்ள இரண்டு சந்தேகநபர்களும் இந்த திட்டத்திற்கு உறுதியளிக்கப்பட்ட பணம் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று விசாரணையின் போது கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.