நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Crime Branch Criminal Investigation Department
By Dhayani Feb 17, 2026 07:39 AM GMT
Report

தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பொலிஸாரிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நவகமுவ பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நேற்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

வாக்குமூலத்தில் வெளியான தகவல்

வழக்கறிஞரின் வாகனம் இருந்த இடம் குறித்த தகவல்களை இந்த இரண்டு சகோதரர்களும் வழங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல் | Akkuregoda Shooting Incident Investigation Update 

மேற்கு தெற்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, நேற்று மதியம் கொட்டாவ பகுதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

குறித்த இருவரும் நவகமுவ பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய நதுன் கவீஷ மற்றும் சனோஜ் கோகில என தெரிவிக்கப்படுகிறது. ‍

வழக்கறிஞரின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்கா அல்லது "டுட்டு" மற்றும் "மோதர நிபுனா" ஆகியோரின் ஐஸ் கடத்தல் நடவடிக்கையை இரண்டு சகோதரர்களும் நடத்தி வருகின்றமை தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் இரண்டு குற்றவாளிகள் இந்த சகோதரர்களைத் தொடர்பு கொண்டு, "7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு விடுங்கள், சுத்த ஐயாவுக்கு வேலை இருக்கிறது, அதை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்

உளவு  நடவடிக்கை

அதன்படி, இரண்டு சகோதரர்களும் கொட்டாவையில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சென்று ஒரு கருப்பு நிற காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதன் பின்னர், மற்றொரு நபர் சகோதரர்களைத் தொடர்பு கொண்டு, கொட்டிகாவத்தையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அங்கு முச்சக்கர வண்டியில் டெலிவரி செய்யப்படும் துப்பாக்கிகள் அடங்கிய பொதியை பெறுமாறு கூறியுள்ளார்.

குறித்த நபர், இரண்டு சகோதரர்களையும் அதை எடுத்துக்கொண்டு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதன்பின்னர், துப்பாக்கிச் சூடு நடந்த நாளில், சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, அவர்கள் அக்குரேகொட பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று, துப்பாக்கி அடங்கிய பொதியினை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் ஒப்படைத்தனர்.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல் | Akkuregoda Shooting Incident Investigation Update

இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கொல்லப்படுவார் என்பது இரண்டு சகோதரர்களுக்கும் ஒரு வாரமாகத் தெரியும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கறிஞர் தனது மனைவியை அவரது அலுவலகத்திலிருந்து அழைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 5 மணிககுள் வீடு திரும்புவார் என்பதினையும் இரண்டு சகோதரர்களும் உளவு பார்த்திருந்தனர்,

மேலும் துப்பாக்கிச்சூடு நடந்த நாளில் வாகனம் சூப்பர் மார்க்கெட் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு சகோதரர்களே தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து இரண்டு சகோதரர்களும் அங்கிருந்து வெளியேறி ஹோகந்தரா நோக்கிச் சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலை தொடர்பான தகவல்

சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலை தொடர்பான பல உண்மைகளின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திய தென்மேற்கு குற்றப்பிரிவு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு இந்த காரில் இருந்து துப்பாக்கிகள் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன்படி, இரண்டு சகோதரர்களும் நேற்று மதியம் 7 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்த காரை திருப்பித் தருவதற்காக கொட்டாவ பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்த பொலிஸ்அதிகாரிகள் இரண்டு சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல் | Akkuregoda Shooting Incident Investigation Update

இரண்டு சந்தேகநபர்களின் விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு பன்னிப்பிட்டியவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து இரண்டு சகோதரர்களுக்கும், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஐஸ் மற்றும் தேவையான வசதிகளை வழங்கியுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் கடத்தல்

அதன்படி, கொலைக்கு உதவ சகோதரர்கள் எந்தப் பணத்தையும் பெறவில்லை எனவும், அவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தும் சந்தேகத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் ஐஸ் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு தெற்கு குற்றப்பிரிவு, ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ், மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜி சஜீவ மெதவத்தேவின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கு தெற்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான டிஐஜி சமந்த விஜேசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தி வருகின்றது.

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் - பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் - பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US