யாழ். உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால், சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய் நிலைமைகள் உள்ள மக்கள் முகக்கவசங்கள் அணிவது பாதுகாப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் காற்று மாசடைவதற்கு வங்காள விரிகுடா போன்ற பிற நாடுகளின் வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மாசடைந்த காற்றே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
காற்றின் தரம் பாதிப்பு
காற்றுடன் வரும் பல்வேறு வகையான காற்று மாசுபாடுகளால் நாட்டின் காற்றின் தரம் குறைந்துள்ளது. இந்நிலை பொதுவாக மிகவும் சிறியது மற்றும் குறைந்தபட்சம் அந்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

இந்நிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய மாவட்டங்களிலும் மன்னார் பகுதியிலும் காற்றின் தரக் குறியீடு குறைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காற்று மாசடைதல் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபை மக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam