இந்திய விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை (Switch) ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் தென் கொரியாவும் இதேபோன்ற நடவடிக்கைக்கு உத்தரவிடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் ஏர் இந்தியாவின் விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விபத்து
சம்பவத்தின் போது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எரிபொருள் ஆழிகளை ஓடு நிலையில் இருந்து கட்ஆஃப் வரை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மாறியதாக முதற்கட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) நிறுவனத்தின் 2018இல் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை சுட்டிக்காட்டியது.
இது பல போயிங் விமானங்களின் ஒபரேட்டர்கள் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகளை தற்செயலாக நகர்த்த முடியாது என்பதை உறுதிப்படுத்த அவற்றின் பூட்டு அம்சத்தை ஆய்வு செய்ய பரிந்துரைத்தது, ஆனால் கட்டாயப்படுத்தவில்லை.
பல இந்திய மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் எரிபொருள் சுவிட்சுகளை தாங்களாகவே ஆய்வு செய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, 787 மற்றும் 737 உள்ளிட்ட பல போயிங் மாடல்களின் பூட்டுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தையை ஒழுங்குமுறை ஆணையம் மேற்பார்வையிடுகிறது, மேலும் அதன் நடவடிக்கை போயிங்கின் பங்குகளை உயர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
