ரம்புட்டானை உட்கொள்ளும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை
ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும் இடங்களை அவை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீமாட்டி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேராவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் ஏராளமாக நாடுபூராகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
டெங்கு பெருகும் இடங்கள்
எனினும், பழங்களின் தோல்களை பொதுமக்கள் முறையாக அப்புறப்படுத்தாததால் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் தோல்கள் டெங்கு பெருகும் இடங்களை உருவாக்கக்கூடும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதைத் தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள சீமாட்டி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் விளைச்சல் பருவகாலம் தற்போது ஆரம்பித்துள்ளதால் பலர் இந்தப் பழங்களின் தோல்களை எல்லா இடங்களிலும் வீசுவதைக் கவனித்ததால், இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய பழத்தோல் போன்ற ஒரு சிறிய இடம் கூட போதுமானது என்றும் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam