இலங்கை விமானப்படைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள்
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 17ஆம் திகதி குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியின் போது மர்ம நபர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பயிற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, முன்னறிவிப்பு அல்லது முன் அனுமதி எதுவுமின்றி மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை
இதன்போது, கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு விமானப்படை வீரர்களும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரும் இணைந்து அந்த மூன்று பேரின் அவர்களின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரி என்பதும், மற்றைய இருவரும் அந்த பொலிஸ் அதிகாரியுடன் வந்த பொது மக்கள் என்பதும் இதன்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த விசாரணைகளின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சிகள் நடைபெறும் காலப்பகுதியில், குறித்த பகுதி பொதுமக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
அத்துடன், அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு ஸ்ரீலங்கா விமானப்படைக்குரியதாகும்.
இதற்கமைய, தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை விமானப்படையினரால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இச்சம்பவம் குறித்து விசேட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan