குளவி கொட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி, புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்தில் உரம் பெறுவதற்காகச் சென்ற சமயம் நேற்றைய தினம் ஒருவரும் இன்றைய தினம் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக அவர்களிடம் வினவிய போது,
நீண்ட நாட்களாக ஆலமரத்தில் குளவிக் கூடு ஒன்று இருப்பதாகத் தெரியவந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணத்தினால் நேற்றையதினம் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் இன்றைய தினமும் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் குளவிக்கூட்டினை
அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.