யாழ். பல்கலையில் விசேட தேவையுடைய மாணவனின் சாதனை
வவுனியாவை சேர்ந்த சிறீதரன் யோகதாஸ், மொழிப்பெயர்ப்பு கற்கைத் துறையில் சிறப்பு கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த முதல் விழிப்புலனற்ற மாணவன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறித்த மாணவன், தோலில் ஏற்பட்ட ஒருவித நோய் காரணமாக 17 வயதில் முற்றாக கண்பார்வையை இழந்துள்ளார்.
சிறப்பு கலைமாணி பட்டம்
இவர் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் உள்ள விழிப்புலன் வலுவிழந்தோரது வாழ்வகத்தில் க.பொ.த உயர்தரக் கல்வியை தொடர்ந்துள்ளார்.
அதனையடுத்து, க.பொ.த உயர்தரப் பரீட்சசையில் 2ஏ மற்றும் 1சி சித்திகளை பெற்ற இவர், மொழிப்பெயர்ப்பு கற்கை துறையை சிறப்புக் கல்வியாக தெரிவு செய்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், மொழிப்பெயர்ப்பு பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர், நடக்கவிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு கலைமாணி பட்டத்தினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
