நாட்டின் வெவ்வெறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 14 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை பகுதியில் லொறி ஒன்று வீதியை கடக்கமுற்பட்ட ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் எனத் தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவர் படுகாயம்
இதேவேளை, அத்துருகிரிய பகுதியில் அதிவேக நெடுஞ்சாலை மேம்பால வீதியில் பயணித்த லொறி ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரணை - நீருல்ல வீதியில் பயணித்த லொறி ஒன்று, பின்னோக்கி நகர்ந்து பின்னால் வந்த வான், முச்சக்கரவண்டி மற்றும் இரு லொறிகளுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam