எரிபொருள் நெருக்கடி - கொழும்பில் மறு அறிவிப்பு வரும் வரை உடன் நடைமுறைக்கு வரும் திட்டம்
கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கூறுகையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவு உடன் நடைமுறைக்கு வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதலின் விளைவாக நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு ஒப்புதல்
இந்த முடிவிற்கு கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொழும்பு நகரத்திற்குள் நுழைந்து வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய உலகளாவிய நெருக்கடியால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையிலேயே நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என கூறியுள்ளனர்.
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam