குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்து இளைஞரொருவர் பலி
திருகோணமலை - குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்து இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்தூர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குச்சவெளி மதுரங்குடா - செந்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுதேந்திரன் ஜனூஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செந்தூர் மதுரங்குடா கலப்பு பகுதியில் மீன் பிடிப்பதற்காக இரு இளைஞர்கள் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸ் விசாரணையின் பின்னர் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri