யாழில் விபரீத முடிவினால் இளம் யுவதி மரணம்
யாழில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25.09.2023) காலையில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயக்குமார் டானுகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்த யுவதியின் தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பலியாகியுள்ள நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்த கொண்டுள்ளார்.

அதேவேளை கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த அவரது மாமாவின் 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்டநிலையில் அவர் இன்று தூக்கில் தொங்கியவாரு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri