பலாங்கொடை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அதிபர் கொலை
பலாங்கொடைப் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரொருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான அபேரத்ன (வயது 78) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் வீட்டில் பல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்துள்ளார். இன்று காலை தந்தைக்கு உணவு வழங்குவதற்காக மகன் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தந்தை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள சடலம்
இதையடுத்துத் தந்தையை உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மகன் கொண்டு சென்றுள்ளார். எவ்வாறாயினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே குறித்த நபர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையைில், சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும்
பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
