பாலியல் அத்துமீறல் விவகாரம்: இந்திய உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஸ்டிராவில் அத்துமீறலுக்கு ஆளான 14 வயது சிறுமி ஒருவருக்கே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவை கலைக்க வேண்டி சிறுமியின் குடும்பத்தினர் மும்பை மேல் நீதிமன்றத்தை வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றில் மேல்முறையீடு
எனினும் வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், கரு 30 வார காலத்தை கடந்து விட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை குறிப்பிட்டு கருவை கலைக்க அனுமதி மறுத்திருந்தனர்.

இதனால் சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றில் தலைமை குறித்த நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட், தலைமையிலான அமர்வு, கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து கருவை கலைக்க முடியுமா, அவ்வாறு செய்தால் சிறுமிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை குறித்த அறிக்கை அளிக்க வேண்டுமென மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து¸ இந்நாட்டின் சியோன் மருத்துவமனையின் பரிந்துரையின்படி உயர்நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam