ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..
அமெரிக்காவின் A-10 Warthog போர் விமானம் வெள்ளிக்கிழமை ஹோர்மூஸ் அருகே சுட்டு வீழ்த்தியதாக, தகவல் ஆதாரங்களை மேற்கோள் காட்டி The New York Times தெரிவித்துள்ளது.
F-15E Strike Eagle விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
A-10 விமானம்
எனினும் A-10 விமானத்தில் இருந்த ஒரே விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஈரானில் வீழ்ந்த F-15E விமானத்தில் இருந்த இரண்டு பணியாளர்களில் ஒருவரைத் தேடும் மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, F-15E விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அதில் இருந்த இரண்டு பணியாளர்களும் வெளியேற்ற (eject) செய்யப்பட்டதாக அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதில் ஒருவரை மீட்டுள்ள நிலையில், மற்றொருவரின் நிலைமை இதுவரை தெரியவில்லை. இந்த மீட்பு நடவடிக்கை, அமெரிக்க இராணுவம் முன்னெடுத்த தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின் போது நடைபெற்றதாக, Associated Press தெரிவித்துள்ளது.
F-15E Strike Eagle விமானம்
ஈரான் அரச ஊடகங்கள், தங்களது இராணுவம் F-15E Strike Eagle விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சமூக ஊடகமான X-ல் பதிவிட்டுள்ளன.
மேலும், Pentagon-இன் உள்துறை மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது” என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Karoline Leavitt, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரம் குறித்து தகவல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், ஈரானின் Tasnim News Agency, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க விமானங்கள் மீது வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.
மேலும், தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட UH-60 Black Hawk ஹெலிகாப்டர் ஒன்று ஈராக் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
உயிர் தப்பிய அமெரிக்க விமானி
ஆனால், இதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் ஊடகங்கள், காணாமல் போன பணியாளரைத் தேடும் பணிக்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் C-130 Hercules போன்ற விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

சில விமானங்கள் ஈரான் வான்வழி பாதுகாப்பு தாக்குதல்களுக்கு உள்ளாகியதால் பின்னடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலைமை தீவிரமடைந்த நிலையில், ஈரான் ஒளிபரப்புகள் பொதுமக்களை எச்சரித்து, உயிர் தப்பிய அமெரிக்க பணியாளர்களை கண்டறிய உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
சில இடங்களில், “எதிரி விமானி” பற்றிய தகவல் வழங்கினால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழி பாதுகாப்பு அமைப்பு
சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், தென் ஈரான் பகுதிகளில் தாழ்வாக பறக்கும் அமெரிக்க விமானங்கள், குறிப்பாக C-130 Hercules மற்றும் ஹெலிகாப்டர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஈரான் ஊடகங்கள், F-35 Lightning II போர் விமானம் ஒன்றையும் தங்களது வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளன. ஆனால், இதையும் அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.
இதுவரை, United States Central Command அல்லது வெள்ளை மாளிகை இந்த புதிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ பதில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
