லண்டனில் எலும்பு சிகிச்சை நிபுணரின் தவறால் 789 சிறுவர்கள் பாதிப்பு

London United States of America Medicines
By Amal Jan 30, 2026 06:41 AM GMT
Report

 உலகப்புகழ் பெற்ற லண்டனின் சிறுவர் மருத்துவமனையில் பணியாற்றிய என்பு சிகிச்சை நிபுணர் யாசர் ஜப்பார், மேற்கொண்ட தவறான அறுவை சிகிச்சைகள் மூலம் சுமார் 94 சிறுவர்களுக்கு தீராத உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 முதல் 2022 வரை ஜப்பார் மொத்தம் 789 சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 94 சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 35 பேருக்கு மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லையோரப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாதியர் தொடர்பில் கசிந்த காணொளி

எல்லையோரப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாதியர் தொடர்பில் கசிந்த காணொளி

சிறுவர்கள் பாதிப்பு

இதன்போது, முறையான காரணம் இன்றி அறுவை சிகிச்சை செய்தமை, எலும்புகளைத் தவறான இடத்தில் துண்டித்தமை, பொருத்தப்பட்ட உலோகக் கம்பிகள் மற்றும் பிளேட்டுகளை முன்கூட்டியே அகற்றியமை எனப் பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

லண்டனில் எலும்பு சிகிச்சை நிபுணரின் தவறால் 789 சிறுவர்கள் பாதிப்பு | 789 Children Affected By Orthopaedic Surgeons

ஜப்பாரிடம் சிகிச்சை பெற்ற சிறுமி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பினால், அவரது இடது காலின் கீழ் பகுதியை அகற்ற வேண்டிய (Amputation) சூழல் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு சிறுவன் தேவையற்ற கணுக்கால் அறுவை சிகிச்சையால் தீராத வலியுடன் கல்லூரியை விட்டு விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதே போன்று, மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதாகப் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2021-லேயே சக மருத்துவர்கள் ஜப்பாரின் சிகிச்சை முறை குறித்து எச்சரித்தும், 2022 ஜூன் வரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் லண்டன் பொலிஸார் (Metropolitan Police) இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் 

இந்தச் சம்பவம் மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று அதன் தலைமை நிர்வாகி மேத்யூ ஷா ஒப்புக்கொண்டுள்ளார்.

லண்டனில் எலும்பு சிகிச்சை நிபுணரின் தவறால் 789 சிறுவர்கள் பாதிப்பு | 789 Children Affected By Orthopaedic Surgeons

"பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது யாசர் ஜப்பார் வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர் பிரித்தானியாவில் மருத்துவம் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை

மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மேலும் ஒரு சந்தேக நபர் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மேலும் ஒரு சந்தேக நபர் கைது


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US