இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்திற்கு இதுவரை 700 மில்லியன் ரூபா
பேரிடனரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இதுவரை 700 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 635 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் 30,470 க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணயத்தில் வைப்பு
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியில் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பு செய்யக்கூடிய கணக்குகள் மூலம் இந்த நிதியத்திற்கு கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபாயை கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பணம் 33 நாடுகளுக்கு தொடர்புடைய கணக்குகள் மூலம் பெறப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக திறைசேரியை மேற்கோள் காட்டி சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி வரையான தகவல்களின் அடிப்படையில் 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணத்தை வைப்பு செய்துள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam