யாழில் மேலும் 6 பேர் கோவிட் தொற்றால் மரணம் - 10 நாள்களில் 62 பேர் காவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட் தொற்றால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் பருத்தித்துறையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் , வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கோவிட் தொற்றுள்ளமை அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322ஆக உயர்வடைந்துள்ளது.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
