கடற்றொழிலுக்கு சென்ற 55 வயது குடும்பஸ்தர் மாயம்..! பொதுமக்களின் உதவியை நாடும் குடும்பத்தினர்
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புன்னையடியைச் சேர்ந்த 55 வயதுடைய குணநாயகம் சிவானந்தம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
55 வயது குடும்பஸ்தர் மாயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வழமை போன்று கடற்றொழிலுக்காக சென்ற குறித்த நபர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எனினும், கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் போதிலும் அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இவரது திடீர் மறைவால் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri