இலங்கை நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்ற வாகனங்களில் சுமார் 50 வாகனங்களில் அரச இலச்சினை இல்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச வாகனங்களிலும் அரச இலச்சினை பதியப்பட வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் ஐம்பது சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எரிபொருள் பரிசோதனை
இதற்கிடையில், 41 நாடாளுமன்ற வாகனங்களின் எரிபொருள் எரிப்பு சோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

2016 டிசம்பர் 29 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, 12 மாத காலத்திற்குள், 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பின்னரோ அல்லது ஒரு பெரிய இயந்திரப்பழுதுபார்ப்புக்கு பின்னரோ எரிபொருள் பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 28 அன்று, ஐந்து அதிகாரிகளைக்கொண்ட ஒரு குழு, நாடாளுமன்றத்திற்கு சொந்தமான 12 வாகனங்களை ஏலம் விட தீர்மானித்த நிலையில், அந்த பணி இன்று வரை முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சலுகை
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன உரிமங்கள் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை விதிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முரணாக, சிரேஷ்ட நிர்வாகப் பதவியில் ஆறு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யாத மூன்று நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை மோட்டார் வாகன உரிமங்கள் வழங்கியமை தொடர்பாக முறையான ஒப்புதல் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
இந்த தகவல், இலங்கை நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam