சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 41 இலங்கை பெண்கள்
இலங்கையை சேர்ந்த சுமார் 41 வீட்டுப் பணிப்பெண்கள் எவ்வித காரணமும் இன்றி நீண்டகாலமாக சவுதி அரேபியாவில் தடுத்து வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த பெண்கள் சுமார் 18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான எவ்வித சட்டரீதியான அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
இந்த பெண்களில் மூன்று பேருக்கு சிறிய குழந்தைகள் உள்ளனர் எனவும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பெண்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி முகாமையாளரான மங்க ரந்தெனிய கூறியுள்ளார்.